இந்து முன்ன​ணியை கண்டித்து திருப்பூரில் 20-ம் தேதி பொதுக்கூட்டம்

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்ன​ணியினரின் செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம்​ தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்ன​ணியினரின் செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம்​ தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில் அனைத்துக் கட்சி ​நிர்வாகிகள் ​கூட்டம், மார்க்சிஸ்ட்​ கம்யூனிஸ்ட்​ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.​ இக்கூட்டத்தில், திருப்பூரில் இந்து முன்னணியினர், வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மாநக​ர்​​முழுவதும் ​சாலைகளை மறித்தும், போக்குவரத்தை நிறுத்தியும் அவசரமாக செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டியும் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்பட்டது.



மேலும், கோல்டன் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக அகற்றி விட்டு இந்து முன்னணியின் கொடிக்கம்பத்தை நட்டு கொடியேற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சூழலில், இந்து முன்னணியினரின் போக்கை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோல்டன் நகர் பகுதியில் வரும் 20-​ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மா​னம் நிறைவேற்றப்பட்டது.



இந்த கூட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சி, ​​இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழக​ம் உள்​ளி​​ட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...