உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணம் செல்லும் உடுமலை மலைக்கிராம மக்கள் : சம்பக்காடு பகுதியை மீட்டு தரக் கோரிக்கை

திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம் கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில், 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நூறு ஆண்டுகளாக தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கேரளா வனத்துறையினர் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, கம்பி வேலி அமைத்து தமிழக பகுதி மலைவாழ் மக்கள் சென்று வர அனுமதி மறுத்தது.



இதனால், மலைவாழ் மக்கள் 6 கி.மீ., சுற்றி கூட்டாறு வழியாக சென்று வந்தனர். தமிழக வனத்துறை அதிகாரிகள் சார்பில் கேரளா வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், மலைவாழ்மக்கள் திரும்ப அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சாக்கு போக்கான பதில்களை கூறி வந்தனர். 4 மாதங்கள் ஆகியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் தமிழக வனத்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இப்பகுதி மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த கூட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கோ அவர்கள் ஆற்றில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் ரேசன் பொருட்கள் வாங்கி சென்ற 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆற்றைக் கடக்கும் போது குடும்ப அட்டைகள் மற்றும் ரேசன் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவர்கள் சிறிது தூரத்தில் மரக்கிளைகளைப் பிடித்து கரை ஒதுங்கி உள்ளனர்.



மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச அரிசி கொண்டு சென்ற வாகனமும், ஆற்றைக் கடக்க முடியாததால் சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கு தேவையான பொருட்கள் கூட வாங்குவதற்கு வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தோளில் சுமந்தபடி, உயிரை பணயம் வைத்து தினமும் கடந்து செல்கின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டைகள் திரும்ப கிடைக்க அரசு அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.



மழை தொடர்ந்தால் 600 குடும்பங்களும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டாறு பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் அல்லது கேரளா வனத்துறையிடம் பேச்சு நடத்தி பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பகுதியை மீட்டுத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மலைவாழ் மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...