உதகை பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.



நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியும், போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 9 பேருக்கு ரூ. 40 லட்சம் காப்பீடு மூலம் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.






பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முதலமைச்சர் நிவாரண நிதி மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகம் சார்பில் காப்பீடு மூலம் உடனே காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் முறை முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி தவிர, போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சமும் என ரூ. 40 லட்சம் 9 பேருக்கு காப்பீடு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தரமில்லாத பேருந்துகள் இல்லை. போக்குவரத்து துறையின் நடவடிக்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. சாலைப் பாதுகாப்பிற்கு ரூ. 65 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார். இதைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உதகை பேருந்து கவிழ்ந்த விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட 18 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர். 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Video: Syed Abbas

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...