பவானி ஆற்றை பாதுகாக்கும் வகையில் ரூ. 91 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். 

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உற்பத்தியாகும் பவானியாறு கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்திற்குள் நுழைகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு என 3 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி நதி மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவு நீர் கலப்பால் கடுமையாக மாசடைந்து வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் கரையோர ஊராட்சிகளின் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரிடையாக பவானியாற்றில் கலக்க விடப்படுவதாலும், இங்குள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள் சட்ட விரோதமாக திறந்து விடப்படுவதாலும் இந்த ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த இயலாத சூழல் நிலவி வருகிறது. 

நகராட்சி கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கென தமிழக அரசால் ரூ. 91 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இத்திட்டப்பணியின் துவக்க விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு திட்டப்பணியினை தொடங்கி வைத்தார். 

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ரூ. 40 கோடி செலவில் கோவை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் பல்லாண்டு கோரிக்கையான அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி மேம்படுத்தும் திட்டம் இன்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளபடி விரைவில் துவக்கப்பட்டு குறித்த காலத்தில் முடிக்கப்படும். இத்திட்டத்தில் விடுபட்டிருந்த பல பகுதிகள் புதிய திட்ட வரைவில் இணைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...