வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். 

தமிழகம் முழுவதும் அனுமதியற்ற மனைப் பிரிவில் வாங்கிய வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில், மனைகளை வரைமுறைப்படுத்துவற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம், அ.பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு முகாம் திருப்பூர் பி.என்.ரோடு நெருப்பெரிச்சலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்தனர். 

இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், வரைமுறைப்படுத்தப்பட்ட மனைகளுக்கான ஆணைகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த முகாமில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையர் வாசுக்குமார், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...