பருவ மழை தொடக்கம்; நீலகிரியில் விவசாய பணிகளுக்கு ஆயத்தம்

நீலகிரி: நீலகிரியில் பருவ மழை தொடங்கியுள்ளதால், விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், முளைப்புத்திறன் அதிகமுள்ள விதைகளை, பயன்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



நீலகிரி: நீலகிரியில் பருவ மழை தொடங்கியுள்ளதால், விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், முளைப்புத்திறன் அதிகமுள்ள விதைகளை, பயன்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம். இங்கு காய்கறிகள் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. இதில், அதிகபட்சமாக கேரட் 2,200 ஹெக்டேரிலும், கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும் மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது.

பருவமழை

கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மழை பெய்யாததாலும், பனி தாக்கத்தாலும் நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு தரிசாக காட்சியளித்தன.

ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மற்றம் மே மாதங்களில் கோடை மழை பெய்ததால் முதல் போகம் அமோகமாக இருந்தது. தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. இரண்டாம் போகத்துக்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தை உழுது சமன்படுத்தி விதைப்பு பணிக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.



அறிவுரை

விவசாயிகள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அச்சுறுத்துவது போலி விதைகள். இந்த விதைகளை வாங்கி விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, மருந்து தெளித்து அறுவடைக்கு காத்திருக்கும் நிலையில், அவை முளைக்காமல் மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது.

இந்நிலையில், மலைக் காய்கறி விதைகளின் முளைப்பு தன்மை மற்றும் புறத் தூய்மையை ஆய்வு செய்து, அதன்பின் பயிரிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உதகை வேளாண் அலுவலர்கள் கூறுகையில், "பட்டாணி, பிரன்சு பீன்ஸ் விதைகளின் முளைப்புத் திறன் 75 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம் இருக்க வேண்டும். முட்டை கோஸ், முள்ளங்கி, டர்னிப் விதைகளில் முளைப்புத் திறன் 70 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், காலி பிளவர், புருக்கோலியில் முளைப்புத்திறன் 65 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், கேரட் விதையின் முளைப்புத் திறன் 60 சதவீதம், புறத்துாய்மை 95 சதவீதம், முள்ளங்கி, டர்னிப்பில் முளைப்புத் திறன் 70 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், பீட்ரூட், காப்சிகம், பினாச்சில் முளைப்புத்திறன் 60 சதவீதம், புறத்துாய்மை, 98 சதவீதம் இருக்க வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் விதைகளை பரிசோதனை கொடுத்தால், முடிவுகள் ஏழு நாட்களில் அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். விதைப் பரிசோதனை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே, விவசாயிகள், விதைப் பரிசோதனை செய்து பயிர் செய்ய வேண்டும்." என்றனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...