தமிழக முதலமைச்சரை 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைக்கும் சத்குரு

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.



கிரிக்கெட் வீரர் விராத் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர், தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, பலரும் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'பிட்னஸ் சேலன்ஞ்சை எதிர்கொள்ளுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சத்குரு அழைப்பு விடுத்துள்ளார்.



அவரது அழைப்பை ஏற்று, அரசியல் பிரமுகர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...