கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: பத்துக்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம்

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி என்ற பகுதியில் தாராபுரத்திலிருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பல்லடம் நோக்கி காடா துணிகளை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.



பெரும்பாளி என்ற பகுதிக்கு வந்த பொழுது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மினி ஆட்டோ மோதியது. ஆட்டோ பேருந்தின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் ஆறுமுகம் (47), பயணிகள் சுப்பம்மாள் (40), செல்வி (42) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



இந்த நிலையில், தப்பியோடிய விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை பல்லடம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...