உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்து : அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கடந்த 14-ம் தேதி உதகை அருகே மந்தடா எனும் இடத்தில் அரசு பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பத்திற்கு பழுதடைந்த பேருந்தை இயக்கியதுதான் காரணம் எனப் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், பேருந்து விபத்தைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் உதகை மத்திய பேருந்து நிலையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமிது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விபத்திற்குக் காரணமான பழுதடைந்த அரசு பேருந்தை இயக்கக் கூறிய கிளை மேலாளர், துணை மேலாளர், உதவி செயற் பொறியாளர், பொறியாளர் ஆகிய 4 அதிகாரிகள் மேல் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், இனி இதுபோல, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். உதகையில், முதலமைச்சர் அறிவித்தபடி, அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செய்யது உள்பட ண100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...