உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களை அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது: கோவையில் செந்தில் பாலாஜி கணிப்பு

கோவை: உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை: உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியாவில் அ.ம.மு.க சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அ.ம.மு.க., நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :- ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால், மத்திய அரசின் அழுத்தம் காரணமாக சென்னை - சேலம் இடையே எட்டு வழி சாலை அமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு பெற்றுத் தரவும், அங்கு மலைகளில் உள்ள கனிமங்களை எடுக்கவுமே முதலமைச்சர் ஆர்வம் காட்டி வருகிறார். 

கோவையில் குடிநீர் விநியோகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பது தவறானது. தனியார் நிறுவனங்களிடம் சன்மானப் பெட்டியை பெற்றுக் கொண்டு, தமிழகத்தையே இந்த அரசு எழுதிக் கொடுத்துவிடும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் அ.தி.மு.க., அரசால் எதிர்கொள்ள முடியாது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு தி.மு.க.,வை காரணம் காட்டுவது தவறானது. உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில் அ.ம.மு.க., வெற்றி பெறும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...