ஸ்டெர்லிங் தொழிற்சாலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்டெர்லிங் தொழிற்சாலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்டெர்லிங் தொழிற்சாலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

உதகை அருகே உள்ள சாண்டி நல்லா பகுதியில் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் கடந்த 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது இதில், 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கேப்சூல்கள் தயாரிக்கத் தேவையான ஜெலட்டின், டை கால்சியம் பாஸ்பேட் உரம் மற்றும் உண்ணக்கூடிய ஜெல்லி ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. 



நீண்ட காலமாக இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர், பைக்காரா அணையில் கலப்பதால், அதை குடிநீராக பயன்படுத்தும் பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 



அதற்கேற்றாற் போல, பைக்காரா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பது உரிய சான்றாக உள்ளது. தொழிற்சாலை நிர்வாகம் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே வெளியேற்றுகிறோம் என்று கூறி வந்தாலும், இந்த தொழிற்சாலை மீதான புகார் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. புகார் வரும் போதெல்லாம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீரை ஆய்வுக்கு உட்படுத்தி சோதனை செய்வார்கள்.



 

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்த தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பி கழிவு நீரை வெளியேற்றக் கூடாது. மீறினால் தொழிற்சாலை இயங்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியது. 

இந்நிலையில், நேற்று இந்த தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யாவிடம் மனு ஒன்றை அளித்தனர் 

இந்நிலையில், இன்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நளினி, தொழிற்சாலைகளின் ஆய்வாளர் தங்கராஜ், உதகை தாசில்தார் தினேஷ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் தொழிற்சாலையில் என்னென்ன அபாயகரமான பொருட்கள் உள்ளன என்றும், தேக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...