உதகையில் கொட்டித் தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் தீவிர மழைப் பொழிவைப் பெறும். இந்தாண்டு குறித்த நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மலை தோட்ட காய்கறிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரமாக நீடித்த கனமழையால் உதகை நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...