தொழில் நிறுவனங்கள் மானிய வசதிகளை பயன்படுத்த திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு

திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தொழில் துறை நலிவடைந்துவிட்டதாக பல்வேறு தொழில் துறையினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, "நலிவடைந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் சிறு குறு அல்லது பெரிய நிறுவனங்கள் இணைந்து குழுவாக மத்திய மற்றும் மாநில அரசுகளை அணுகும் போது, மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் என மொத்தம் 80 சதவிகித மானியம் அளிக்கின்றன.

அதற்கான முயற்சியினை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் செய்து வருகிறது. மேலும், பருத்தி விலையேற்றம் என்பது பருத்தி கழகத்தின் தவறான ஏற்றுமதி கொள்கையால் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதியினை கட்டுப்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...