அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் வாலிபர்

திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.


திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.



திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகர் (21). தனது பள்ளி பருவம் முதலே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த தனசேகர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து எப்பொழுதும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வார்.

கல்லூரியில் நடந்த ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், பல்கலைக் கழகம் அளவில் நடைபெற்ற போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து மிஸ்டர். கோயம்புத்தூர் போட்டியில் பங்கேற்று ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்றார். 

மீண்டும் மிஸ்டர்.தமிழ்நாடு, மிஸ்டர்.இந்தியா போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்ற தனசேகர் தனது வெற்றி மைல்கல்லில் மேலும் ஒரு மகுடமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் 'மிஸ்டர் மசில்-2018' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 



ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் சென்ற ஒரே போட்டியாளர் தனசேகர். இவர் 22 வயதிற்குட்பட்ட பிசிக் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

உலக ஆணழகன் தனசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் ஏசியன் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வேன்." என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...