கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி விளக்கேற்றிய பா.ஜ.க.,வினர்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன், கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரம் கொளுத்தவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியது.

இதையடுத்து, கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரங்கள் கொளுத்தவும் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்த தடையை கண்டித்து தடை மீறி விளக்கேற்றும் போராட்டத்தில் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டனர். 

பிரதோஷ தினமான இன்று கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேசுவரர் ஆலயத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வினர் தடையை மீறி நெய் விளக்குகளை ஏற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்குகள் ஏற்றி வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து பா.ஜ.க.,வினர் அங்கு சென்று விளக்கேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், "இந்துக்களின் நம்பிக்கையான விளக்கேற்றும் முறைக்கு தடை விதிக்கக் கூடாது. பாதுகாப்பு காரணமாக இருந்தால் விளக்கேற்ற தனி இடம் கோவில்களில் ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கோவில்களிலும் பா.ஜ.க.,வினர் நேரில் ஆய்வு நடத்துவார்கள். எந்த கோவிலிலாவது தடை விதிக்கப்பட்டால், தடை நீக்கம் தொடர்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும். தடையை மீறியதற்காக காவல் துறையினர் வழக்குப் பதிந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார்." என்றார்.

பா.ஜ.க.,வினரின் இந்த திடீர் போராட்டத்தை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...