அரசு பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவ இடம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது. 

சென்னையில் கடந்த ஜுலை 1-ம் தேதி தொடங்கிய மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 10 வரை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அரசுப் பள்ளிகளைக் காட்டிலும், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கே அதிகம் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பயின்ற ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்திருப்பது அனைவரிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் மு. பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த சத்துணர்வு ஊழியர் ரங்கராஜன் என்பவரின் மகன் அலெக்ஸ் பாண்டியன். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1.111 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சியில் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றார். அதன் விளைவாக, நீட் தேர்வில் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட அலெக்ஸ் பாண்டியனுக்கு, திருச்சியில் உள்ள கே.ஏ.பி.வி., அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...