மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து மினி மாரத்தான்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாற வேண்டி மாணவ-மாணவிகள் இன்று மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாற வேண்டி மாணவ-மாணவிகள் இன்று மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தினர்.



மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இச்சட்டம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு மாற வேண்டிய நேரமிது என்பதை வலியுறுத்தியும், இயற்கை சூழலுக்கு பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேட்டுப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற 'க்ராஸ் கன்ட்ரி ரேஸ்' என்னும் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. 



சுவாமி சச்சிதானந்தா ஜோதி நிக்கேதன் பள்ளி சார்பில் இன்று காலை நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மாரத்தான் பந்தயத்தை கவிஞர் கவிதாசன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சென்னகேசவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அண்மையில் திருப்பூரில் பிளாஸ்டிக் இல்லா திருமண நிகழ்ச்சி நடைபெற்றதை மாணவர்கள் மத்தியில் சுட்டிக்காட்டி பேசிய கவிதாசன், "இது போல நாம் அனைவரும் நம் இல்லங்களில் இருந்து பிளாஸ்டிக் ஒழிப்பைத் தொடங்க முன்வர வேண்டும்." என்றார். 

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தொடங்கிய இந்த மராத்தான், நீலகிரி மலையடிவாரமான கல்லார் வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இறுதியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...