கோவையில் பள்ளி உடமைகளுக்கு தீ: தடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த மூன்று வாரங்களாக பள்ளி உடைமைகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக புகார் அளித்தும் சூலூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



இந்நிலையில், தீ வைப்பு சம்பவங்களை தடுக்கக் கோரி, அப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தீ வைக்கப்படுவதால், புத்தகங்கள், சீருடைகள்  உள்ளிட்டவை எரிந்து நசமானதாகவும், இந்த தீவைப்புகளினால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...