அச்சம் வேண்டாம்; கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை - ஆய்வுக்குப்பின் அதிகாரிகள் உறுதி

கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அங்கு விற்பனையாகும் மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மலின் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இன்று உக்கடம் மீன் மார்க்கெட் சில்லறை விற்பனை நிலையத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள 64 கடைகளில் 45 கடைகள் மீன்கள் விற்பனைக்கென்றே பிரத்தியேகமாக செயல்படுபவை.



அங்கு மீன்கள் சுகாதாரமாக விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் உபயோகிக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் அங்கு விற்பனையாகும் மீன்கள் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மீன் வளத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் கூறுகையில், "மீன் விற்பனையாளர்களுக்கு அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்படும் மானியங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின் ஆய்வு மேற்கொண்டதில் மீன்களில் எந்த விதமான ரசாயன பொருட்களும் கலக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மீன் விற்பனையாளர்களிடம் மீன் விற்பனை குறித்த யுத்திகளும் எடுத்துரைக்கப்பட்டது." என்றார்.



இது குறித்து, உக்கடம் மீன் மார்க்கெட் சங்க தலைவர் H.S. பாவா கூறுகையில், "இங்கு தரமான மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. கடற்கரையில் இருந்து மீன்கள் வரும் போதே வியாபாரிகளிடம் எச்சரிக்கை செய்யப்படுகின்றது. ஒருவேளை அவர்கள் ரசாயனம் கலந்த மீன்கள் கொடுத்தால் அது திருப்பி அனுப்பப்படும்." என்றார்.



இந்த ஆய்வின் போது மீன் மார்க்கெட் செயலாளர் காதர், மற்றும் மீன் வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...