மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: அடிப்படைத் தேவைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 17-ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது. 



27-வது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா சிறப்பாக நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது. 

கோவை வடக்கு சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

கூட்டத்தின் போது, தற்போது ராஜ கோபுர பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் குண்டம் இறங்க வசதிகளாக எவ்வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடுகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குண்டம் திருவிழா நிகழ்வின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் அடிப்படைத் தேவைகளான குடி தண்ணீர், கழிப்பறை, மருத்துவம், தடையில்லா மின்சாரம் என அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் வனப்பகுதியினை ஒட்டி கோவில் அமைந்துள்ளதால் இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வன எல்லைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தி வன பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தவும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...