திருப்பூரில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

நிகழச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் தாமரைக்கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.

இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதனைஅடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

தகவலறிந்த ஊத்துகுளி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...