கூடலூர் பகுதியில் தொடர் கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தாழ்நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கனமழை இடைவிடாது பெய்வதால், கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, கூடலூரில் 78 மி.மீ மழையும் தேவாலாவில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ஓவேலி பேரூராட்சியிலுள்ள பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக,  ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஓவேலி பேரூராட்சிப் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த சாலையைச் சீரமைத்தனர்.

மீட்புப் பணிகளை கூடலூர் வட்டாட்சியர் ரவிகுமார் நேரில் ஆய்வு செய்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் மழை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...