இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்றார் லட்சுமிநாராயணசாமி

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

84-வது பொதுக்குழு கூட்டத்தின் போது நடைபெற்ற தேர்தலில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் பற்றி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை படிப்பை முடித்த லட்சுமிநாராயணசாமியின் தலைமையில் சுகுணா நிறுவனமானது மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. 

அனிஷ்குமார் ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நிறுவனத்திலும் இவர் நிர்வாக பங்குதாரராக பதவி வகித்து வருகிறார். சுகுணா அறக்கட்டளை மூலமாக ஏழை மக்கள் கல்விக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.

வகித்த பதவிகள்

தென்னிந்திய இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

தற்போது, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை குழு உறுப்பினராகவும், மத்திய எக்ஸ்சைஸ் கமிஷனரகத்தில், ஜி.எஸ்.டி., ஆலோசனை பிரதிநிதியாகவும் பதவி வகிக்கிறார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...