திருப்பூரில் வீட்டின் உரிமையாளரைத் தாக்கி மனைவியின் தங்கசங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அருகே ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பனியன் கம்பெனி அதிபர் பாலகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டின் உள்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். 

இன்று அதிகாலை 2 மணியளவில், வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

இந்த நிலையில், சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது மகன் மற்றும் மனைவி சுப்புலட்சுமியையும் அந்தக் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், சுப்புலட்சுமி அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையைக் கொள்ளையர்கள் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 



இதைத்தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் அருகே இருக்கும் செந்தில் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வீட்டின் கதவை திறக்க முடியாததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 



இந்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...