வரும் 17-ம் தேதி கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

வரும் 17-ம் தேதி கரூர் ரயில்நிலையம் - திருச்சி பயணிகள் ரயில் முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்நிலையம் - கரூர் ரயில்நிலையம் ரயிலானது, திருச்சி ரயில்நிலையம்-முத்தரசன்நல்லூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரயில் முத்தரசன்நல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.

ஈரோடு ரயில்நிலையம் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

17-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் ரயில், திருப்பூர்- முத்தரசன்நல்லூர் இடையே 01.40 மணிநேரம் நிறுத்திவைக்கப்படும்.

திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலின் புறப்பாடு நேரம் 01.30 மணிநேரம் தாமதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 01.00 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 02.30 மணிக்கு கிளம்புகிறது.

இதேபோல, லோகூர் - பொம்மிடி நிறுத்தம் அருகே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற இருப்பதால், 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலப்புழா-டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - சேலம் இடையே 01.40 மணிநேரம் நிறுத்தப்படும். இதேபோல, சேலம்- காட்பாடி ரயில்நிலைம் ரயில் 01.20 மணிநேரம் சேலம்-லோகூர் இடையே நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...