ரஜினிமக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை : கோவையில் தமிழருவி மணியன் பேட்டி

கோவை: காந்திய மக்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.



கோவை: காந்திய மக்கள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவ்வியக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது கனவாகவே உள்ளது. டாஸ்மாக் வருவாயைக் கூட்டுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியதைப் போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். படிப்படியாக ஒராண்டிற்குள் தமிழகம் மதுவற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடும் அமைப்புகள், ஏன் மதுக்கடைகளுக்கு எதிராக போராடவில்லை..?. 



ஊழலைப் பாதுகாக்கும் வகையில் தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த லோக் ஆயுக்தாவை கிழித்து குப்பையில் எறிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு 60 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பே இல்லை. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவதோடு, மக்கள் ஆதரவோடு இந்தத் திட்டம் செயல்படுத்த வேண்டும். 

உரிய நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார். கமல்ஹாசன் அவசர அவசரமாகக் கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பைக் கட்டமைக்க முடியாமல் உள்ளார். 80 விழுக்காடு கட்சி அடிப்படை கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 20 விழுக்காடு பணிகள் முடிவடைந்ததும், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். 3 மாத இடைவெளி கூட தேர்தலை சந்திக்க ரஜினிக்கு போதுமானது. இதுவரை பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. மேலும், முள்ளை முள்ளால் எடுப்பது போல, கலைத்துறையில் இருந்து வந்தவர்களால் மலிந்த ஊழலை ரஜினி அகற்றுவார். நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார். நடிகர் கமலஹாசன் சூப்பர் ஆக்டர்.  மக்கள் ஆதரவு இருப்பதால் தான் 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். 

எப்போது கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் தான் முடிவு செய்வார். ரஜினி முதலமைச்சராக நாங்கள் ஆதரவு தருகிறோம். ரஜினிகாந்திற்கு துணையாக இருப்போம். ரஜினி மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து சிந்திக்கவில்லை. பா.ஜ.க., அனாதையாக இருக்கிறது என்பதை நான் சொல்லி தான், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதை முதலில் சொன்னது ரஜினி தான், இவ்வாறு அவர் கூறினார். 



முன்னதாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், லோக் ஆயுக்தாவை கூர்மைப்படுத்தக் கோரியும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கோவை காந்திப்பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...