பா.ஜ.க.,வுடன் இணைந்தால் ரஜினிக்கு சிவசேனா ஆதரவளிக்கும் : மாநிலத் தலைவர் அறிவிப்பு

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் சிவசேனா கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ரமேஷ் பாபு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொதுமக்களுக்குக் கந்து வட்டியை கொடுத்து தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலை பொதுமக்களுக்குப் பயன் தரும் சாலையாக இருப்பதால், அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.



வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலை செயல்படுத்தப்போவதாக தெரிவித்திருப்பதை சிவசேனா கட்சி ஆதரிக்கிறது. ரஜினிகாந்த் பா.ஜ.க.,வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் சிவசேனா கட்சியும் அதில் இணையும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...