7 கோடி மோசடி! செருப்பால் அடித்த மக்கள்!


கோவையில் 7 கோடிக்குமேல் மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் செருப்பால் அடித்ததால் பரபரப்பு.

திருச்சியைச்சேர்ந்த சின்னசாமி கணபதி பகுதியில் மெட்குயுர் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்தார், திருச்சியை சேர்ந்த பெல் நிறுவனதில் ஒப்பந்த செய்துள்ளதாகவும், அதற்கு பொது மக்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் ஊக்கத்தொகையுடன் ஒரு லட்சத்தி பத்தாயிரமாக வழங்கப்படும் என ஆசை வர்த்தை கூறியதை நம்பி கோவையில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை தங்கள் வசதிக்கு ஏற்ப முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் செலுத்திய தொகை குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்ட போது, பெல் நிறுவனத்துடன் எந்த ஒரு ஓப்பந்தமும் செய்யவில்லை , மகிழ்ச்சியாக வாழ பணம் தேவைப்பட்டதால்தான் உங்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர் .புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சின்னச்சாமி இன்று விசாரணைக்காக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்துள்ளார். விசாரணை முடிந்த பின்பு வெளியே வந்த சின்னச்சாமியை சூழ்ந்த முதலீட்டாளர்களில் ஒருவர் செருப்பால் அவரை தாக்கியதால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சின்னசாமியை பத்திரமாக அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது இந்த மோசடியில் சின்னச்சாமியின் குடும்பம் முழுவதும் ஈடுபட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் திருச்சியில் வீடு, நிலம்,200 பவுன் நகைகள் மற்றும் கார்கள் அதிக அளவில் வாங்கியிருப்பதாகவும்,அதை மீட்டு தங்களது முதலீட்டு பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையினரிடம் முறையீட்டனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...