பாகிஸ்தான் திருப்பியடிக்கும் அபாயம். எல்லை கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்

சண்டிகர்: இந்திய விமானப்படைத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், புகுந்து இந்தியா நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து எல்லை நெடுகிலும் ராணுவம் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. எதற்கும் தயார் என்ற நிலையில் ராணுவம் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் அனைத்தும் தற்போது காலியாகி வருகிறது. அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளைக் காலிசெய்து விட்டு கூட்டம் கூட்டமாக வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தீவிரவாதிகள் புகுந்து தாக்கக் கூடும் என்பதால் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் எல்லைப் புற கிராமங்களில் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...