சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் விடுவி


சிரியாவில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண் கடந்த அக்டோபர் மாதம் கடத்தப்பட்டார்; கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

புதன்கிழமையன்று அப்பெண்ணின் பெயரை வெளியிடாமல், அவரை பற்றி தெரிவித்த ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர், துருக்கியில் உள்ள எல்லையை அவர் பாதுகாப்பாக கடந்து சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணும் அவரின் குழந்தையும் தற்போதைய சூழலில் நலமாக இருப்பதாகவும், அவர் ஜெர்மன் தூதரக ஊழியர்களால் கவனித்துக் கொள்ளப்பட்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் செய்திதாளான பில்ட், அந்த பெண் நிறுவனம் சாரா ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர் என தெரிவித்துள்ளது.

அல் கெய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவொன்றால் அவர் பிடித்து வைக்கப்பட்டிருந்தார் என்றும், அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் யூரோக்களை கேட்டிருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...