இந்தியா - பாகிஸ்தான், விமான போக்குவரத்து நிறுத்தம்?

புதுடில்லி: யூரி தாக்குதல், சிந்து நதி ஒப்பந்த விவகாரம் ஆகியவற்றிற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தான், எல்லைக்குள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளிடையே இயக்கப்படும் விமான போக்குவரத்து தொடர்பான விபரங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கலாம் அல்லது தாழ்வாக பறக்க அனுமதி வழங்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறையிடம், பிரதமர் அலுவலகம் கருத்து கேட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையும் அனைத்து விபரங்களை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது.

பாகிஸ்தான், விமானங்களுக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது தடை விதிக்கலாமா என்பது குறித்த இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் தான் எடுக்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் 2001ம் ஆண்டு, இந்திய பார்லி., கட்டிடம் மீதான தாக்குதலின் போது இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...