கிராமப்புற மலைவாழ் மக்களிடம் இலவச பட்டா வழங்குவதாக கூறி மோசடி

கோவையில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு கிராமப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஈஷாவிற்கு அருகில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு ஆகிய கிராமப் பகுதிகளில் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஈஷா யோகா மையம் இப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்பு வசதி, கல்வி உதவி என அனைத்து உதவிகளும் செய்து வருகின்றனர். இப்படி ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன்  கோவை பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர் தன்னை பத்திரிக்கை நிருபர் என்றும், உங்கள் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருவதாக கூறி எங்கள் பகுதி மக்களிடம் ரூ.2500 பணம் வாங்கிக்கொண்டு இதுவரைக்கும் வீட்டுமனை பட்டா வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் 43 ஏக்கர்  நிலத்தை ஈஷா அறக்கட்டளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. என்று பொய்புகார் அளித்து எங்களை பயன்படுத்தியுள்ளார். மலைவாழ் பழங்குடியினர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...