கிராமப்புற மலைவாழ் மக்களிடம் இலவச பட்டா வழங்குவதாக கூறி மோசடி

கோவையில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு கிராமப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஈஷாவிற்கு அருகில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு ஆகிய கிராமப் பகுதிகளில் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஈஷா யோகா மையம் இப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்பு வசதி, கல்வி உதவி என அனைத்து உதவிகளும் செய்து வருகின்றனர். இப்படி ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன்  கோவை பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர் தன்னை பத்திரிக்கை நிருபர் என்றும், உங்கள் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருவதாக கூறி எங்கள் பகுதி மக்களிடம் ரூ.2500 பணம் வாங்கிக்கொண்டு இதுவரைக்கும் வீட்டுமனை பட்டா வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் 43 ஏக்கர்  நிலத்தை ஈஷா அறக்கட்டளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. என்று பொய்புகார் அளித்து எங்களை பயன்படுத்தியுள்ளார். மலைவாழ் பழங்குடியினர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...