வழி தவறிய புள்ளிமான் தெருநாய் கடித்து பலி

மோகனூர்: வழி தவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில், படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையோரம் உள்ள அசலதீபேஸ்வரர் கோவில் அருகில் வாழைத்தோப்பு உள்ளது. இங்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, புள்ளிமான் ஒன்று, வழி தவறி வந்தது. அதை பார்த்த, இரண்டு தெருநாய்கள் மானை துரத்தின. பயந்துபோன புள்ளிமான், கோவில் பின்புறம் உள்ள மயான சுற்றுச்சுவரை தாண்டி குதித்தது. அங்கு சுற்றி வளைத்த தெருநாய்கள் மானை கடித்து குதறின. அப்போது, ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள், தெருநாய்களை விரட்டி மானை மீட்டனர். இது குறித்து, மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனச்சரகர் கனகரத்தினம் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர்கள் அருள்குமார், மாதேஸ்வரன், அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், அதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மானை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...