மாணவன் ஆற்றில் மாயம்: 2 நாள் கழித்து வழக்குப்பதிவு

ப.வேலூர்: ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில், நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் போது, மாயமான கல்லூரி மாணவனை, மூன்றாவது நாளாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஹரிஹரன், 18. இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், பி.டெக்., இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1ம் தேதி, தன் நண்பர்கள், ஆறு பேருடன், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தார். அவரது நண்பர்கள் கரைக்கு திரும்பிய நிலையில், ஹரிஹரன் மட்டும் கரைக்கு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்களின் உதவியுடன் மாணவனை தேடினர்.

பின், நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள், ப.வேலூர் காவிரி ஆற்றின் இருகரையோரங்களில், நான்கு பரிசல்களில் தேடினர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...