சசிகுமார் கொலை வழக்கு: திசை திருப்பும் சி.பி.சி.ஐ.டி !

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் காவல் துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை காரணமாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆன்ந்த குமாரை இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல் துறையினர் அச்சுறுத்தல் காரணமாகவே ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கைது நடவடிக்கைகளை காவல் துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கையை இருப்பதாகவும் இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தொடர்பாக விசாரிக்க சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கையும் இந்த பகுதிகளில் தலைதூக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் சசிகுமார் கொலை வழக்கினை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலிசார் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவதாக கூறி வருவதாகவும் அதே வேளையில் இந்த வழக்கினை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததை போல அவர்கள் திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த காடேஸ்வரா சுப்பிரமணியத்துடன் இந்து அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...