காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு செப்டம்பர் 30-ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவை, மத்திய அரசின் வாதத்தை அடுத்து, நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞரும் ஒப்புதல் தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் அக்டோபர் 3-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற வரம்புக்கு உட்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது. மேலும், ஏற்கெனவே இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், மேலாண்மை வாரியம் அமைக்க தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் ரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

அடுத்த விசாரணை, அக்டோபர் 18-ம் தேதி, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நடைபெறும் எனறும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் குழுவைக் கொண்டு இரு மாநிலங்களிலும் கள ஆய்வு நடத்தி, 17-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், 6-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புக்கொண்ட நிலையில், 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தினசரி 2 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...