உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: இன்று மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசரகதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டதை எதிர்த்து, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறியும் திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் நீதிபதி ஆணையிட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவால் எற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்றே சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தங்களது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே மேல்முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கோரி திமுக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...