சைக்கிள சும்மா நிறுத்தாதீங்க..! உடனே கால்பண்ணுங்க ரேடியோ சிட்டிக்கு...

பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைக்காக வாங்கப்பட்ட சைக்கிளை ஒருக்கட்டத்தில் பயன்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்து விடுவது வழக்கம். அவ்வாறாக தேக்கப்பட்ட சைக்கிள் நீண்ட நாட்களுக்குப்பின் பயன்படுத்தவே முடியாத நிலைமைக்கு வந்து விடுகின்றது.



இவ்வாறாக பயனற்று கிடக்கும் சைக்கிளை அதனை வாங்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி வானொலி நிறுவனம் ஒரு திட்டதை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனற்று கிடக்கும் சைக்கிள் குறித்து அதன் உரிமையாளர் தெரியப்படுத்தினால் அவரின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி இல்லாதவர்க்கு கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தினை கடந்த மாதம் கோவை மாநகராட்சி மேயர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

பயனற்று உள்ள சைக்கிளை மீட்டு இல்லாதவர்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி 91.1 வானொலி நிறுவனத்தின் சார்பில் ''ரீசைக்கிள்'' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிள் குறித்து தெரியப்படுத்தினால் அவர்களின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி சீரமைக்கப்பட்டு பின் அதன் பயன்பாடு உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறாக கடந்த தினங்களில் கோவை உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிளை கொடுக்க +91 422 663 9911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.







Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...