92 சதவிகித மக்கள் சுகாதாரமற்ற காற்றையே சுவாசிக்கின்றனர்..! புள்ளிவிவரத்தை வெளியிட்ட உலக சுகாதார ஆணையம்

இந்த உலகில் 92 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதாரமான காற்று இல்லாமல் மோசமான மற்றும் மாசடைந்த காற்றையே சுவாசித்து வருகின்றனர் என உலக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்று மாசடைந்துள்ள பகுதிகளையும், எதனால் மாசு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தான பட்டியலையும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், மஞ்சள், இளம்சிவப்பு, சிவப்பு, மற்றும் ஊதா ஆகிய வண்ணங்கள் மூலம் வகைப்படுத்தி காற்றுமாசின் தன்மையை விளக்கியுள்ளது.  

 

இதில், ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் காற்றுமாசில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன என அந்த ஆணையம் அறிவித்துள்ளது. இப்பகுதியில் அதிகப்படியான மக்கள் இதனாலேயே உயிரிழக்கின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

மேலும், அந்த நாடுகளைப்போலவே அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் காற்றுமாசினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் முறையான விழிப்புணர்வு மூலம் அந்த மாசுவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனால் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது.  

 

காற்றுமாசானது நாடுகளுக்கு இடையே மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக இத்தாலியில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் அப்பகுதியில் மோசமான நிலையில் காற்று மாசடைந்து உள்ளது.  

 

உலக சுகாதார ஆணையம் சமீபத்தில் ஆய்வு ஒன்றில் ஈடுபட்டது. அதில், வெளிப்புற காற்று மாசினால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. வாகனப்புகை, மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை ஆகியவற்றாலேயே சுமார் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.  

 

மேலும், புகை பிடித்தல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றாலும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 2012யில் வெளிப்புற மற்றும் உட்புற காற்று மாசினால் உலகளவில் 6.5 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர். இது, எச்ஐவி மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈடாக உள்ளதாக அந்த ஆணையம் அறிவித்துள்ளது.  

 

இந்த வரைபடம் செயற்கை கோள், வான்வெளிப் போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சல்பேட், நைட்ரேட் மற்றும் கருப்பு கார்பன் ஆகிய நச்சு வாயுக்கள் காற்றில் கலந்திருப்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளன. 

 

பெண்கள், குழந்தைகள் அதிகளவில் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார் உலக சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் டாக்டர் ஃலேவியா பூஸ்ட்ரியோ. மக்கள் அனைவரும் சுத்தமான, சுகாதாரமான காற்றையே பிறப்பு முதல் இறப்பு வரை சுவாசிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அதிகளவில் காற்று மாசுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்து மாசைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்களிடம் இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...