பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை

லண்டன்: பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஹேக்கர்கள்

ஆப்பிள் வாட்சுகள் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக உலகம் முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்ததாகக் கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, உலகின் முன்னணி தடகள வீரர்கள் சிலரின் மருத்துவ அறிக்கைகளையும் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்து, இன்டர்நெட்டில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை

இந்நிலையில் பிரிட்டன் பிரதமராக தெரேசா மே பதவியேற்ற பின், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் ஆப்பிள் வாட்ச்சும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்க்கக்கூடும் என்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக டேவிட் கேமரூன் பிரிட்டன் பிரதமராக இருந்த போது அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கொண்டுவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...