அரியானாவில் முதன்முறையாக திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு

அம்பாலா: அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அம்பாலாவில் முதன்முறையாக கைதிகளுக்கான திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்படுகிறது.  இதன் மூலம் கைதிகள் திறந்த வெளியில் சுதந்திரமாக உலாவ முடியும். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி யஷ்பால் சிங்கால் கூறுகையில், அரியானா  மாநிலத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் அம்பாலாவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அரியானாவில் அமைய இருக்கும் திறந்த வெளி சிறைச்சாலையானது மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள திறந்த வெளி சிறைச்சாலையை விட  மேம்பட்டதாக இருக்கும். இங்கு குறைந்த அளவே சிறை பாதுகாவலர்கள் ஈடுபடுவர். நன்னடத்தை கொண்ட கைதிகள் மட்டுமே இங்கு அடைக்கப்பட  உள்ளனர். எனவே இங்குள்ள கைதிகள் மற்ற கைதிகளை விட சற்று சுதந்திரமாக வெற்று வெளியில் உலாவும் வைகையில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மேலும் அரியானா சிறைச்சாலைகில் கைதிகள் மத்தியில் பெருகி வரும் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு  வருகிறது. சோனிபட் மற்றும் ரோட்டக் ஆகிய சிறைச்சாலைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான  பணியை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...