ஆளுநரின் நடவடிக்கைக்கு ஸ்டாலின் வரவேற்பு: மாநில நலனுக்கான மாற்று ஏற்பாடு என கருத்து


சென்னை: முதலமைச்சரின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நலம்பெற்று திரும்பும்வரை தமிழகத்தின் நலன் கருதி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளில் அமைச்சரவையைக் கூட்டி முக்கிய முடிவெடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஆளுநரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் வரவேற்றுள்ளார். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக நலனை கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...