சாதியைப் பற்றி இழிவுபடுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை: பொள்ளாச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவனை சகமாணவர்களின் மத்தியில் சாதியைப் பற்றி இழிவுபடுத்தி பாகுபாடு செய்து தாக்குதல் நடத்திய பள்ளியின் ஆசிரியர் ஓவிய மற்றும்  தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;

பொள்ளாச்சியில் உள்ள A.நாகூர் அரசு மத்திய மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ஆனந்த் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். பள்ளிக்கு சென்ற மாணவன் ஆனந்தை பள்ளி ஆசிரியர் ஓவிய, மற்றும் தலைமை ஆசிரியர் சகமானவர்கள் மத்தியில் அம்மாணவனை தாழ்த்தப்பட்ட சாதி என்று இழிவுபடுத்தியும் படிப்பதற்கு தகுதி இல்லையென்றும் கூறியும், மாணவனை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை கேட்டபோது, படிக்க வைப்பதற்கு விருப்பம் இருந்தால் இங்கு படிக்க வையுங்கள் இல்லை என்றால் டி.சி வாங்கிக்கொண்டு செல்லுமாறும் கூறினர். பெற்றோரிடம் மறைமுகமாக சாதியை பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது அவமானமாக இருந்ததாகவும், பின்னர் ஆனந்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுமதித்து. இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், ஆனந்த் மற்றும் பெற்றோர்க்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மாணவன் அப்பள்ளியில் படிப்பை மேற்கொள்ள நிர்வாகம் தகுந்த ஏற்பாடு செய்யவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...