கோவை துடியலூரில் கார், இருசக்கர வாகனம், தனியார் பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி – ஒருவர் படுகாயம்


கோவை துடியலூர் அருகே அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீதி மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.



கோவை துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு அருகே தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது பின்னால் கோவை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த மாருதி சிப்ட் கார் மோதியது. இதில் இருசக்கரவாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இருசக்கர வாகனத்தின் மீதூ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பினை தாண்டி எதிர் சாலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் பயங்கமாக மோதியது. இதில் கார் பேருந்தின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொருங்கியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்து மீட்டனர். 

இதில் சம்பவ இட்த்திலேயே காரில் பயணம் செய்த 3 பேரும்பலி மணிகண்டன் 22 - கவுண்டம்பாளையம், அஸ்கர் அலி 22 - சிவாநந்தாகாலனி, முகம்மது சாகிப் 22 - கவுண்டம்பாளையம் ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். மேலும் படுகாயமடைந்த  இருசக்கர வாகன ஓட்டி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் பொதுமக்களில் பலபேர் மீட்ட்பு பணியில் ஈடுபட்டாலும் பெரும்பாலோனர் தங்களது செல்போன்களில் படம் எடுப்பதிலேயே மும்முறமாக இருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...