வாடிக்கையாளருக்கு சேவை வழங்க ஏடிஎம்மில் வங்கி ஊழியர்கள் நியமிக்க ரிசர்வ் வங்கி யோசனை

மும்பை: ஏடிஎம் பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி சர்வே எடுத்துள்ளது. இதில், ஆசியாவில் இந்தியர்கள்தான் மிக அதிக அளவில் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. மொபைல் பேங்கிங் பயன்படுத்துதிலும் இந்தியர்கள்தான் முதலிடம். சர்வே எடுத்ததில் பாதிப்பேர், வாரத்தி்ல் ஒரு முறையாவது ஏடிஎம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இந்த பயன்பாடு 26 சதவீதமாகவும், சீனாவில் 44 சதவீதமாகவும் உள்ளது. 

இதுபோல் மொபைல் பேங்கிங் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் 11 மடங்கு உயர்ந்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்டில் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது, கடந்த ஆகஸ்டில் சுமார் 7 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியர்கள் ஏடிஎம் மட்டுமின்றி வங்கி கிளைக்கு செல்வதிலும் அதிக அளவில் உள்ளனர். எனவே இந்தியாவில் ஏடிஎம்க்கு எப்போதுமே தேவை உள்ளது. கடந்த ஜூலையில் 75 கோடி ஏடிஎம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே மாதத்தில் 6.5 கோடி மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போது ஏடிஎம் இயந்திரத்துக்கு ஒரு காவலாளி மட்டும் நியமிக்கப்படுகிறார். இத்துடன் கூடுதலாக ஒரு வங்கி ஊழியர் அல்லது வங்கி சேவைக்கான ஒரு நபர் தனியாக நியமிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இதன்மூலம், வங்கி கிளையில் பெறக்கூடிய கூடுதல் சேவைகளை ஏடிஎம் மூலாமாகவே பெறவும், வங்கி வர்த்தகத்தை விரிவு படுத்தவும் இது உதவும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...