'எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்!

கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் 50 பேர் பங்கேற்பு.

கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் அமைப்பு சார்பில் கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 50 பேர் பங்கேற்றனர்.



இது குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருவதாகவும் 51 நாடுகளில் 12000 உறுப்பினர்களுடன் இயங்கி வருவதாகவும் கோவையில் இது துவங்கபட்டு 6வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதாக கூறினர். ஆஸ்திரேலியாவிலிருந்து 50 பேரும் இந்தியாவிலிருந்து 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தி, வார்பட தொழில், உதிரி பாகங்கள் உற்பத்தி, உள்ளிட்டோரிடம் தொழில் அனுபவங்களை அறிந்து கொண்டதாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

மேலும் வரும் காலங்களில் இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வணிகம் துவங்குவது குறித்த அனுபவங்களை பெற்றதாக கூறினர். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கருத்தரங்கி தொழில் மூலம் வளர்ச்சி கண்ட பத்மஸ்ரீ முருகானந்தம், சுகுணா நிறுவனர் சொளந்தராஜன், தைரோ கேர் டாக்டர். வேலுமணி இன்போசிஸ் நிறுவனர் ஷிபுலால் தங்களது வெற்றி பெற்று வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டது தங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக அமைந்த்தாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

நேற்று உதகை சென்றவர்கள் அங்குள்ள படுகர் இன மக்களின் நடனம், கலை நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்ததாக தெரிவித்தவர்கள் கோவையில் ஜோதிடம், கேளிக்கை நிகழ்வு உள்ளூர் உணவு, சமையல் கலைகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் உறுப்பினர்கள் அடுத்த ஆண்டு அஸ்திரேலியாவிற்கு வர அழைக்கபட்டுள்ளதாகவும் அங்கு உள்ள தொழில் வாய்புகள் குறித்து நம் நாட்வர் தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு என ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆங்கர் டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி ஜெயந்தரா ஜெயசந்திரன், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் இனை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் துரைசாமி, எஸ்.ஜே.பி மோட்டர் நிர்வாக இயக்குனர் சிவபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...