'நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்'- விருது வழங்கும் விழாவில் இயக்குனர் சமுத்திரக்கனி பேச்சு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில்  மணிவண்ணன் விருது வழங்கும் விழா நடை பெற்றது. நாய் வால் என்ற திரைப்பட அமைப்பு ஒருங்கிணைத்த இவ்விழாவில் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டனர். சிறந்த திரைப்படத்திற்கான மணிவண்ணன் விருது 'அப்பா' திரைப் படத்திற்கு வழங்கப்பட்டது. இதை அப்படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி பெற்றுக்கொண்டார். தொடர்ம்து சிறந்த நாவலுக்கான விருது 'பார்த்தீனியம்' என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. இதை அப்புத்தகத்தின் எழுத்தாளர் தமிழ் நதி பெற்றுக்கொண்டார். 



தொடர்ந்து, பார்த்தீனியம் நாவலின் எழுத்தாளர் தமிழ் நதி பேசியதாவது :- 

எனது நாவலை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த நாவலை 14 மாதங்கள் எழுதினேன். திருத்துவதற்கு 8 மாதங்கள் ஆனது. பலர் இந்த நாவலை குறித்து பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் நான் நாய் வால் போன்றவள். எழுத்து தான் என் வாழ்வின் ஆதாரம் அதை விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன்.

 இவ்வாறு அவர்  பேசினார்.  



இதைத் தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி பேசுகையில்:-

'நான் அப்பா திரைப்படத்திற்கு வாங்கும் முதல் விருது இது. மணிவண்ணன் ஒரு அருமையான மனிதர். அவரிடம் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்ட நான் இன்று அவர் பெயரிலே விருது வாங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு நண்பர்கள் அதிகம். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறது.   என்ன பிரச்சனை வந்தாலும், நான் இருக்கிறேன் என்று குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள். குழந்தைகள் தைரியசாலியாக உருவெடுப்பார்கள்.  

நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்.  என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் அடிப்படையில் தான் அப்பா படத்தை உருவாக்கினேன்.  நம் சமூகத்தில் சாதி ஊறிப்போய்விட்டது. ஒருவரிடம் நான் நாம் 5 நிமிடம் பேசினால் , நம் சாதியை கேட்கத்தான்  வருகிறார்கள். இது மாற வேண்டும்.' என்றார். 



இவ்விழாவில் எழுத்தாளர் பாமரன், நடிகர் நமோ நாராயணன்,  மற்றும் 100க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்..



Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...