'நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்'- விருது வழங்கும் விழாவில் இயக்குனர் சமுத்திரக்கனி பேச்சு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில்  மணிவண்ணன் விருது வழங்கும் விழா நடை பெற்றது. நாய் வால் என்ற திரைப்பட அமைப்பு ஒருங்கிணைத்த இவ்விழாவில் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டனர். சிறந்த திரைப்படத்திற்கான மணிவண்ணன் விருது 'அப்பா' திரைப் படத்திற்கு வழங்கப்பட்டது. இதை அப்படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி பெற்றுக்கொண்டார். தொடர்ம்து சிறந்த நாவலுக்கான விருது 'பார்த்தீனியம்' என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. இதை அப்புத்தகத்தின் எழுத்தாளர் தமிழ் நதி பெற்றுக்கொண்டார். 



தொடர்ந்து, பார்த்தீனியம் நாவலின் எழுத்தாளர் தமிழ் நதி பேசியதாவது :- 

எனது நாவலை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த நாவலை 14 மாதங்கள் எழுதினேன். திருத்துவதற்கு 8 மாதங்கள் ஆனது. பலர் இந்த நாவலை குறித்து பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் நான் நாய் வால் போன்றவள். எழுத்து தான் என் வாழ்வின் ஆதாரம் அதை விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன்.

 இவ்வாறு அவர்  பேசினார்.  



இதைத் தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி பேசுகையில்:-

'நான் அப்பா திரைப்படத்திற்கு வாங்கும் முதல் விருது இது. மணிவண்ணன் ஒரு அருமையான மனிதர். அவரிடம் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்ட நான் இன்று அவர் பெயரிலே விருது வாங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு நண்பர்கள் அதிகம். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறது.   என்ன பிரச்சனை வந்தாலும், நான் இருக்கிறேன் என்று குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள். குழந்தைகள் தைரியசாலியாக உருவெடுப்பார்கள்.  

நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்.  என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் அடிப்படையில் தான் அப்பா படத்தை உருவாக்கினேன்.  நம் சமூகத்தில் சாதி ஊறிப்போய்விட்டது. ஒருவரிடம் நான் நாம் 5 நிமிடம் பேசினால் , நம் சாதியை கேட்கத்தான்  வருகிறார்கள். இது மாற வேண்டும்.' என்றார். 



இவ்விழாவில் எழுத்தாளர் பாமரன், நடிகர் நமோ நாராயணன்,  மற்றும் 100க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்..



Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...