'உடனடியாக தற்காலிக உரிமம் வழங்க வேண்டும்' - கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதுவரை  பட்டாசு  கடை வைக்க  மாவட்ட நிர்வாகம் தற்காலி உரிமம் வழங்காத்தால்  பட்டாசு கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். 

கோவை மாவட்ட  பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள்  சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் பொது செயலாளர்,  தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனைகள் நடைபெறும் , இதுபோன்று  பட்டாசு விற்னை செய்யும் கடைகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாகவே  தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆனால் தீபாவளிக்கு  இரண்டு வாரங்களே உள்ள நிலையிலும் பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்காமல் தாமதித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதானல் பட்டாசு கொள்முதல் செய்து சுமூகமாக வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தவர், உடனடியாக மாவட்ட நிர்வாகம்  தற்காலிக உரிமம் வழங்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வணிக வரித்துறையினர் நெருக்கடி இன்றி எளிய முறையில் வணிக வரி உரிமம் கிடைகக் வழி செய்ய வேண்டும் எனவும்  சீன பட்டாசுகளை தவிர்த்து தரமான பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். 

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...