மாணவர்களின் திறமையை வளர்க்க பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ் போட்டி


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் நினைவாக பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ்- 2016 போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான திறமைகள், கண்டுபிடிப்புகளை வளர்க்கும் விதத்தில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிகளின் விபரம் வருமாறு:-

1) அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி, 2) வினாடி- வினா, 3) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்பான சொற்பொழிவுகள், 4) ஓவியப் போட்டிகள், 5) சைஃபி- அறிவியல் புனைக்கதைகள் ஆகியவை ஆகும்.

இப்போட்டிகளில், அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், வான்வெளி போக்குவரத்து மற்றும் அறிவியல் குறித்தும் மாணவர்களுக்கு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 

இந்நிகழ்வில், மாணவர்கள் உருவாக்கிய விமான மாதிரிகள் எவ்வாறு செயல்படுகின்றன எனவும், 100 அடி உயரத்தில் சுமார் 20 நொடிகள் பறக்கக் கூடிய விமான மாதிரியும் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் ரோபோ விளையாட்டுகளும், கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அப்துல் கலாமின் நினைவாக வரும் அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகளும், பங்குபெரும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. பார்க்குழுமத்தால் நடத்தப்படும் இன்னோஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்க உள்ளது என பார்க் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 99655 11155 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...